Sunday, May 12, 2013


தாய்
 
உயிர் கொடுத்தாய்
எனை வ‌ள‌ர்த்தாய்
நித‌ம் நினைத்தாய்
என் நிழ‌ல் ர‌சித்தாய்
அம்மா... என் அம்மா...
 
க‌ருவ‌றையில்
இட‌ம் அளித்தாய்
என் கை பிடித்து
ந‌டை வ‌குத்தாய்
அம்மா... என் அம்மா...

வ‌ள‌ர்ந்து வ‌ரும் வேளையிலே
வ‌ர‌ங்க‌ளையே வ‌ழ‌ங்கி வந்தாய்
வ‌ள‌ர்ந்த‌ பின்பும் வாழ்க்கையிலே
வ‌ச‌ந்த‌த்தையே வ‌ர‌வ‌ழைத்தாய்
அம்மா... என் அம்மா...

என் காய‌ங்க‌ளின் வேத‌னையில்
மூலிகையாய் நீ இருந்தாய்
நான் முன்னேறும் வேளைக‌ளில்
பின்புல‌மாய் நீ அமைந்தாய்
அம்மா... என் அம்மா...

பட‌ப‌ட‌க்கும் சூழ‌லிலே
சோர்வ‌க‌ற்றி சாந்தம் செய்தாய்
ப‌ண்ப‌ட்ட ம‌னித‌னாய் நான்
ப‌திந்திட‌வே பாதை நெய்தாய்
அம்மா... என் அம்மா...

க‌டைசிவ‌ரை உன் அருகே
நானிருப்பேன்
அம்மா... என் அம்மா...

உன் கால‌டியில்
மோட்ச‌ம் க‌ண்டேன்
நான் வில‌கேன்
அம்மா... என் அம்மா...

                                                                                                                      நெப்போலிய‌ன்